பூப்படைந்த பெண்கள், பிரசவித்த பெண்கள் அதிர உதிர போக்கால அவதிப்படும் பெண்களுக்கான ஆரோக்கியமான மருந்து சோறு
தேவையான பொருட்கள்:
அரிசி-1கப்
தேங்காய் பால்-1கப்
தண்ணீர்-2கப்
மருந்து பொடி-3டேபிள்ஸ்பூன்
பூண்டு-2
தாளிக்க:
சின்ன வெங்காயம்-1கப்
நல்லெண்ணெய்-60மில்லி
தயிர்-3 டேபிள்ஸ்பூன்
கருவா-2
கிராம்பு-3
ஏலம்-3
ரம்பஇலை- கொஞ்சம்
இஞ்சிபூண்டு விழுது-1டேபிள்ஸ்பூன்
மருந்து பொடி செய்ய:
இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
சாலியா-100 கிராம்
சதகுப்பை-50 கிராம்
மருந்து சாத பட்டை கருவா-50கிராம்
சீரகம்-25 கிராம்
இவை அனைத்தையும் பொடியாக திரித்து வைத்து கொள்ளவும்.காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் போது எடுத்து கொள்ளலாம்.
செய்முறை:
ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால்,2 கப் தண்ணீர், 3 டேபிள்ஸ்பூன் மருந்து சாத பொடி சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம் மற்ற தாளிப்பு பொருளை சேர்த்து நன்கு வதக்கி, மீதி வெங்காயம்,முழு பூண்டு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி, கலக்கி வைத்துள்ள மருந்து பொடி கலவையை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.பின்20 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கிளறி,2விசில் தீயை கூட்டி வைத்து,10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
பின் குறிப்பு:
சாதாரண புழுங்கல் அரிசியை வைத்து இதை செய்தால் போதுமானது.ஊற வைத்து சமைக்கும் போது அரிசி நன்கு வெந்து ருசியாக இருக்கும்.இதனை மதியம், இரவு என இரு வேளையிலும் சாப்பிடுவது நல்லது.வெந்தயம் விருப்பப்பட்டால் சிறிதளவு அரிசியை வேக வைக்கும் போது சேர்த்து கொள்ளலாம்.
சத்தான,சுவையான"மருந்து சோறு" ரெடி......
மகளிருக்கான ஆரோக்கியமான, சத்தான உணவுதான் இந்த மருந்து சோறு. பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும்,ஏற்ற உணவாக உள்ளது.கருப்பை புண் ஆறவும்,கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் மிகவும் நல்லது.ஆண்களும் இதனை தாராளமாக சாப்பிடலாம்.இதனுடன் முட்டையை வைத்து சாப்பிடலாம்.கருவாடு குழம்பு, இறால் ஆணம் இவற்றோடு சேர்த்து சாப்பிட இன்னும் ருசியாக இருக்கும்.
Comments
Post a Comment